English lesson/Tuition

கம்பர்மலை யுகே ஸ்தாபனம்

12/04/19

அங்கத்தினர்கள் அனைவருக்கும் அறியத்தருவது,

இன்று (12/04/19) இரவு ஆங்கில வகுப்புகள் முடிந்ததும், பெற்றோர் மாணவர்கள்  உடனான ஓர் சம்பாசனை கூட்டம் எமது Dr P Rasiah தலைமையில் நடைபெற்றது. கல்வியின் முக்கியத்துவம் பற்றி விரிவாக விளக்கம் தம்பி இராசையாவினால் வழங்கப்பட்டது.

கல்வியின் வளர்ச்சிதான் நமது ஊர் வளர்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதை நாம் நன்கு அறிவோம். அந்த பணியை எமது ஸ்தாபனம் தொடர்ந்து செய்யும் என்பதை ஆணித்தரமாக இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

மேலும் இன்று எமது செயல்பாடுகளை அறிந்து எமது சொந்தங்கள் பலர் Foundation Group   இல் இணைந்து இருக்கிறார்கள், Like செய்து இருக்கிறார்கள், அனைவருக்கும் நன்றி.

உங்கள் சிந்தனைகளை  கூறுங்கள், நாம் எல்லோரும் சேர்ந்து எமது கிராமத்தை வளர்திடுவோம்.

நன்றி வணக்கம்,

பாரதி

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a comment